திருச்சி சமயபுரம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாட்டுக்கோழி, புறா உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பராமரித்து ஆசை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் உள்ள கோழிக்கூண்டில் வளர்த்து வந்த 30-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போலீஸ் ஏட்டு ராஜேஷ் மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் மண்ணச்சநல்லூர் தெற்கு ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், அப்துல் ரஷீத் மற்றும் முகமது ஆசிம் ஆகிய மூன்று இளைஞர்கள் கோழிகளை திருடி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கோழிக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோழித்திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் கைது செய்து வழக்குப்பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *