தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைந்து. வருகிற ஜூன் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.இந்நிலையில் திருச்சி மாநகரில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் பெரிய கடைவீதி, தலைமை தபால் நிலையம் சிக்னல் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக திருச்சியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *