சமீபத்தில் வெளியான “காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். காரணம் அத்திரைப்படத்தில் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இப்படத்தை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்களும் இது சிறுபான்மை மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படம் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள திரை அரங்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடுவதை தடை செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட மண்டல செயலாளர் ஷஜன்பைஜி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி, வர்த்தகர் அணி மண்டல தலைவர் MAJ.சாதிக் பாஷா ,ஊடக அணி மண்டல பொறுப்பாளர் KSA.ரியாஸ்,SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா,தொண்டரணி தலைவர் அன்சாரி,வர்த்தகர் அணி தலைவர் அப்துல் மாலிக் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டி வலியுறுத்தி கோஷமிட்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *