கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைக் கனி வரவேற்புரை ஆற்றினார். திருவெறும்பூர் தொகுதி செயலாளர் இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி மற்றும் விம் மாவட்ட தலைவர் மூமினா பேகம் ஆகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம். அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா கண்டன உரை நிகழ்த்தினார். தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் தொகுப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,SDTU நிர்வாகிகள், தொகுதி, கிளை,அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இறுதியாக மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *