தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்க்கு மாநில துணை தலைவர்கள் சுசிராஜ் ஆரோக்கிய ராஜ் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நடராஜன் மாநில பொருளாளர் முனியப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நல்லாட்சி புரியும் தமிழக முதல்வர் மு‌.க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தியது போல தமிழக அரசில் பணிபுரியும் டி பிரிவு பணியாளர்களும் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தி வழங்க கோரியும்,

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது போல தமிழக அரசில் பணிபுரியும் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *