திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 5701 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொது மக்களுக்கும் , பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள் , குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் , போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 2020 – ஆம் ஆண்டு 40 நபர்கள் மீதும் , 2021 – ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும் , இந்த 2022 ஆண்டு நான்கே மாதங்களில் 62 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 60 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொது அமைதியை பேணிக் காப்பதற்காகவும் , நன்னடத்தைக் கான பிணையம் பெறவேண்டி 290 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும் , குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 13 ரவுடிகள் உட்பட 18 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது . மேலும் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 296 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 4429 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட , நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது . திருச்சி மாநகரத்தில் , சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும் , சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் , கெட்ட நடத்தைக்காரர்கள் , வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து , அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *