தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையம் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முதலுதவி மருத்துவ மைய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு‌ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அருகில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன்,  மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *