திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் மழையால் பாதிக்கப்பட்டு சிதலமடைந்த சாலையை சரிசெய்ய காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார் . திருச்சி மாநகர பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் கண்டறியப்பட்டு , மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து

கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய சுற்று பகுதிகளிலும் , அண்ணாசிலை ரவுண்டானா , W.B ரோடு உள்ளிட்ட சாலைகளிலும் காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி மெயின்ரோட்டிலும் தற்காலிகமாக மண்களை கொட்டி சாலையை சீர்செய்து பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது .

 மேலும் இதே போன்று கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா , ராக்கின்ஸ் ரோடு , ஸ்டேட் வங்கி மெயின்ரோட்டிலும் , தில்லைநகர் காவல்நிலைய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரகாளியம்மன் கோயில் முதல் அண்ணாநகர் மற்றும் சாஸ்திரி ரோடு வரை உள்ள சிதலமடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது . மழை நேரங்களில் சாலையில் மோட்டர் வாகனங்களில் செல்வோரை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும் பாதுகாப்பாக வாகனங்களில் பயணம் செய்யுமாறு திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்