புதுக்கோட்டை ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் வயது 45 இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வராஜ் வயது 28 என்பவரை தத்தெடுத்து தனது சொந்த மகனாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சில கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சன்னாசி இறந்துவிட்டார்.  வளர்ப்பு மகனான, செல்வராஜ் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். மேலும் குடிக்கு அடிமையான செல்வராஜ் தனது சொந்த ஊருக்கு வரும்போது தனது தாயிடம் பணம் வாங்கி வீண் செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வராஜ் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த வீரம்மாளிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு, வீரம்மாள் பணம் தர மறுத்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், வீட்டில் உள்ள உலக்கையால் வளர்ப்புத்தாய் வீரம்மாளை அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து காவல் துறைக்கு அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்து விட்டு தப்பி சென்ற வளர்ப்பு மகனான செல்வராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *