குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு திருச்சி மன்னச்சநல்லூர் அரசு மாதிரி மகளீர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் 4-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியும், அதேபோல் LKG , UKG மற்றும் ஒன்றாம் வகுப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மாறுவேடம் போட்டியும் 2-ஆம் வகுப்பு மற்றும் 3-ஆம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் போட்டியும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஜவர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பாரத மாதா போலவும், முருகன், சிவன், கிருஷ்ணர் ராதா போன்று கடவுள்கள் வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *