அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் கடந்த கொரோனா நோய்த்தொற்று பரவிய காலத்தில் மக்களுக்காக காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சமூக பணியாற்றிய திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர் கே ராஜாவுக்கு சிறந்த சமூக சேவகர் விருதை தமிழ் மாநிலத் தலைவர் சின்ராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் நிறுவனத் தலைவர் ஜெயராமன் ஏற்புரையாற்றினார். மேலும் சமூக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக திருச்சி மாவட்ட தலைவர் முகமது சர்புதீன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்