திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இளம் பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 3 நபர்கள் மீது புகார் அளிக்க வந்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி திருவெறும்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பிரசாத் என்பவரின் மனைவி மார்கிரேட் ஜெனிபர் வயது 33 எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் நான் நர்சிங் படிப்பு படித்து உள்ளேன். இந்நிலையில் எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு லாசர் . வீரமலை, சுப்பிரமணி ஆகியோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ .4,00,000 / – என்னிடம் வாங்கி சென்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும் எனக்கு அரசு வேலை வாங்கித் தராமல் இருந்து வந்தனர். மேலும் அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து எனக்கு அரசு வேலை கிடைக்காது என்று தெரிந்ததால் பணத்தை கொடுத்தவர்களிடம் நேரில் சென்று நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை தராமல் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து வரும் லாசர் . வீரமலை, சுப்பிரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், புதிய விசாரணை அதிகாரியை நியமித்து என் வீட்டின் பத்திரத்தை வைத்து நான் வழங்கிய ரூ .4,00,000 / -த்தை மீட்டு தருமாறு திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் மற்றும் கணவர் ஆகியோருடன் புகார் மனு அளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்