தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கோசாலைக்கு காணிக்கையாக வரப் பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள்/பூசாரிகள் 34 பேருக்கு 68 பசு மாடு மற்றும் கன்றுகுட்டி ஆகியவை விலையில்லாமல் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *