திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி வருகைதந்து ராஜகோபுரம் வழியாக மூலஸ்தானம் அருகே சென்று சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்குசென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து பக்தியுடன் தொட்டு வணங்கினார். அதனைத் தொடர்ந்து சமயபுரம் கோவிலில் இருந்து புறப்பட்டு திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *