தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் 15 அக்டோபர் 1931 ல் பிறந்தவர் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம். இவர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படித்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய பங்காற்றினார். மேலும் இந்திய குடியரசு தலைவர் பதவி வகித்து மறைந்தார்.

அவரின் 91-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மதியம் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம் புகைப்படத்தை மாஸ்க் போல 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அணிந்து கொண்டு காட்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் டாக்டர் ஏபிஜே .அப்துல் கலாம் அவர்களின் சாதனைகளை சக மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் முத்து செல்வம் மற்றும் துளசி முத்து செல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *