விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தவர் சக்கரபாணி. இவர் ஓய்வு பெறும் நேரத்தில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று சக்கரபாணி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா டிரைவர் சக்கரபாணியை யாரும் எதிர்பாராத வகையில் தான் வழக்கம்போல் பயணம் செய்யும் இருக்கையில் அவரை அமர வைத்து ஜீப் ஓட்டிக்கொண்டு டிரைவர் சக்கரபாணியின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார். இதனால் இன்ப அதிர்ச்சியில் திகைத்து போன டிரைவர் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவிற்கு நெகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *