தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு தஞ்சை களிமேடு பகுதியில் ஏற்பட்ட தேர் தீ விபத்தில் இறந்த 11 நபர்களின் வீட்டிற்க்கு ஆறுதல் கூறுவதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக வரவேற்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலான அதிமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *