பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்போம் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குருநாதர் வரவேற்புரை ஆற்றிட, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாலா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் சதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும், குறிப்பாக தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சம் கோடி கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டு கோயில் இடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்,

அதேபோல் பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்பின் கொள்கைகளாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும், மேலும் எங்கள் குல தொழிலான உழவர் தொழிலை குழி தோண்டி புதைத்து விட்டனர் அதனை மீட்டெடுத்து வறுமையை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்மேகம் நன்றியுரை ஆற்றினார். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெபக்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *