திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பாக இரு கார்களை நிறுத்துவதில் இரு தரப்பு வாலிபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கார்களிலும் வந்த வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வாலிபரை தாக்கியவர் போலீஸ்காரர் ஒருவரின் தம்பி என்பதும், அவரது நண்பர் ஆகிய இருவர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மது போதையில் இருந்த வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மது போதையால் அடிக்கடி விபத்தும், சண்டை சச்சரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *