திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் ராஜேஷ் வயது 38 கோவா கப்பல் படையின் ஜூனியர் கமிஷனர் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோவாவில் பணியில் இருந்த போது திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான திருச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைப்பு நல்லடக்கம் செய்வதற்காக

கோவாவிலிருந்து தனி விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக கப்பல் படையின் கமாண்டர் மற்றும் கப்பல் படை வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தேசிய கொடி போர்த்தப்பட்ட உடலைப் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *