தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 40 ஆண்களும், 46 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 26 பேரும் சென்னையில் 13 பேரும் கன்னியாகுமரியில் ஆறு பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3 பேர் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று 251 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 869 ஆக உள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்ற தகவலை தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *