தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பல மாத காலமாக பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்வதை கைவிட்டு அனைத்து பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப மாறுதல் விண்ணப்பங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் பணிகளை விரைந்து செய்ய தளவாட பொருட்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஐக்கிய சங்க செயலாளர் ராஜமாணிக்கம், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்ட செயலாளர் சிவசெல்வன், இன்ஜினியர் சங்க தலைவர் பாலாஜி, பொறியாளர் கழக செயலாளர் சந்தானகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க வட்ட பொறுப்பாளர் அருளானந்தம் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *