திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் மற்றும் ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை – 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 12 ,14,16,18 & 20 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவுகளில் கடந்த 28.11.2021 மற்றும் 29.11.2021 ஆகிய தேதிகளில் இருபாலருக்குமான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா செயற்கை ஒடுதள விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது இந்நிலையில் நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் ஆப்பிள் மில்லட் வீர சக்தி, நியூரோ ஒன் மருத்துவமனை டாக்டர் விஜயகுமார், TSP 1 BN commandant of Police ஆனந்தன் , மாநில வலைபந்து கழக செயலாளர் ராஜ்திரு, ஆகியோர் வெற்றி பெற்றவருக்கு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் ஒட்டு மொத்த குழு ஆண்கள் பிரிவின் பதக்கங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் பெற்றது.முன்னதாக தடகள இணைச் செயலாளர் முனைவர் சுதமதி ரவிசங்கர் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ , பொருளாளர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, உதவிச்செயலாளர் கனகராஜ், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன், கே.சி. நீலமேகம், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தடகள சங்க நிர்வாகி சத்தியமுர்த்தி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *