தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரியே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க மாநில தலைவர் அம்பலத்தரசு (எ) ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சார படியும் இதுவரை மத்திய மாநில அரசு பணிகளில் பங்கு பெற்றதையும் கருத்தில் கொண்டு முத்திரையர் உட்பிரிவு சாதிகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஏற்படுத்தி உள்ள இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், நமது புதிய மாநில சங்க கட்டிடப் பணிக்கு மாநில மாவட்ட நிர்வாகிகள் நிதிகளை வழங்க வேண்டும், மேலும் மாநில சங்க அரங்கம் திறப்பு விழா தேதியை உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைத்து அணி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிளியநல்லூர் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *