தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்டம் சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்க போராட்டத்தை நடத்தியது.

மேலும் டாஸ்மாக் போதை பொருட்களால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்த துண்டு அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது அதில் உடல் நலம், மனநலம், குடும்ப நலம், கலாச்சாரம், பண்பாடு, மரியாதை, கண்ணியம், கடமை, பொருளாதாரம், கல்வி, பயிற்சி உழைப்பு, உற்பத்தி, சாலை விபத்து சட்ட ஒழுங்கு போன்றவர்களில் ஏற்படும் சீர்கேடுகளை பற்றி அரசு புள்ளி விவரங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி

 போதை பொருட்களிலிருந்து விளக்கவும் போதை பொருட்களை வெறுக்கவும் டாஸ்மாக் மற்றும் பார்கள் எண்ணிக்கையும் விற்பனை நேரங்களையும் குறைக்கவும் மக்கள் கையெழுத்து இயக்கமாக அரசை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இந்த கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *