திருச்சி பீமா நகர் கனபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களது மகன் விக்னேஷ் வயது 28 இவர் எலக்ட்ரிஷியன் ஆக பணிபுரிந்து வருகிறார் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார் இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் புடவையால் வீட்டின் உத்திரத்தில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம் அந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *