அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், ஆவின் சேர்மன், மாணவரணிச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், ,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜேந்திரன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மறுமலர்ச்சி மதிமுக திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், மகளிர் அணி ரொகையா, மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார், மாவட்டப் பொருளாளர் புலவர் தியாகராசன், அரியமங்கலம் பகுதி செயலர் ஜெயசீலன், பெல்ராசமாணிக்கம், ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *