சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட வற்றால் தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மணிகண்டம் வடக்கு ஒன்றியம் மற்றும் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அல்லி துரை பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக மணிகண்டன் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் கழகச் செயலாளருமான வளர்மதி கழக எம்ஜிஆர் அணி மாநில இணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *