முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு‌.பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, ப.அண்ணாவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் தங்கவேல், செல்வராசு, இந்திரா காந்தி, மல்லிகா சின்னசாமி, பரமேஸ்வரி முருகன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் செல்வராசு மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிரணியினர், செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *