திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி துண்டுப் பிரசுரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.

இதில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள்

கொரோனா விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது.

மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது.

பத்திரிக்கை ஊடகவியல்லாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்கியது.

செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தது.‌

இப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூறுநாள் சாதனைகளை நிறைவேற்றிய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *