திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி வேன்மீது அதிவேகமாக திருச்சி நோக்கி வந்த லோடு லாரி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வாத்தலை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீஸ் விசாரணையில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் ராசிபுரம் பகுதியில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த குடும்பத்தினர் வாத்தலை பகுதியில் டீ குடிப்பதற்காக சாலை ஓரத்தில் ஆமினி வேனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும். அப்போது நாமக்கல்லில் இருந்து உப்பு மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி அதிவேகமாக வாத்தலை அருகே வந்தபோது லாரி ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்தால் லாரி நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேன் மீது விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

 இந்த விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியதால். ஆம்னி வேனில் இருந்த ராசாத்தி அம்மாள் என்ற பெண்ணும், 2-வயது குழந்தையும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு குழந்தை ஒரு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *