திருச்சி மாவட்டம் பெட்டவாய்‌தலை பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45.இவர் வழக்கம் போல் தனது 2,90,000 மதிப்புள்ள காரை (Toyoto Etios) நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார்.

பின்னர் வழக்கம் போல் காலை எழுந்து காரை சுத்தம் செய்ய கார் நிறுத்துமிடத்திற்க்கு வந்து பார்த்த போது கார் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனை பெட்டவாய்தலை காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களை கொண்டு ஆதாராங்களை சேகரித்தனர்.

மேலும் பெட்டவாய்தலை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.அதில் அடையாளம் தெரியாத நபர் காரை திருடி செல்வது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *