ஜமால் முகமது கல்லூரியில் இன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் இதனை அடுத்து இந்த முகாமில் திருநங்கைகளுக்காக 200 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் திருநங்கைகள் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து. தங்களின் ஆதார் எண்களை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட இந்த முகாமில் திருநங்கைகள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன் நிஷா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *