திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொட்டியம் பேரூராட்சியின் துணை தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்சித் தலைமையால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

.இந்நிலையில் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றவும், தலைமையின் உத்தரவை செயல்படுத்தவும் கூட்டணி கட்சிக்கான இடங்களில் பொறுப்பு ஏற்று கொண்டவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தொட்டியம் பேரூராட்சியின் துணைத் தலைவர் ராஜேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்