தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் பிஜேபி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன் படி திருச்சி மாநகர் 28-வது வார்டு தென்னூர் பகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிடும் பிஜேபி மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன் இன்று மாலை தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சி தென்னூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து துவங்கினார். அருகில் 25வது வார்டு பிஜேபி வேட்பாளர் தயாள சுரேஷ், 24-வது வார்டு பிஜேபி வேட்பாளர் ஜான்சி 25-வது வார்டு பிஜேபி வேட்பாளர் முருகேசன் மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *