திருச்சி நீதிமன்றம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சாலையின் நடுவே வலியால் துடித்தபடி அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினார். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு உடனடியாக தீயை போராடி அணைத்தனர். மேலும் தீ காயம் அடைந்தவரை காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ஓஎப்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 45 வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் இவர் வாங்கிய கடனுக்காக இவரை அவமானப் படுத்தியதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நியாயம் வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் முன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *