திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவர் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அங்குள்ள 80 அடி சாலையில் உள்ள ஒரு உறவினரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அவரை வழி மறித்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலி செயினைப்பறிக்க முயன்றனர்.

அப்போது செயினை விடாமல் மகேஸ் வரி கெட்டியாக பிடித்துக் கொண்டு கொள்ளையர்களிடம் போராடினார். இதில் அந்த தாலி செயின் அறுந்து விட்டது. இதில் கொள்ளையர்கள் வசம் 10 பவுன் சிக்கியது. அதை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மீதமுள்ள 5 பவுன் செயின போராடியதால் மகேஸ்வரி வசமானது. இதுபற்றி மகேஸ்வரி தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *