திருச்சி லால்குடியில் இருந்து சிகிச்சைக்காக பெண் அவரது கைக்குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அகிலாண்டபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே சென்ற லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

இந்த கோர விபத்தில் 108- ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் வயது 35 மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செந்தில் குமார் வயது 30 ஆகியோர் படுகாயம் அடைந்து ஈடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே இருந்த பெண், கைகுகுழந்தை மற்றும் உறவினர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த அரை மணி நேரமாக யாரும் வராததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றுவதற்காக, விபத்துக்குள்ளான வாகனங்களின் மீது கயிற்றை கட்டி லாரியையும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தனித் தனியாக பிரித்து ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 5-பேரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த நிருபர்களிடம் கூறுகையில் கடந்த சில மாதங்களாக ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு முறையான விடுப்பு அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக ஆம்புலன்ஸ் மேனேஜர் அறிவுக்கரசு என்பவரால் தான் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *