தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி குறை தீர்க்கும் மாநகராட்சி சிறப்பு முகாம் திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள சந்தோஷ் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.

 இந்த மக்களை தேடி குறைத்தீர்க்கும் சிறப்பு முகாமில் மாநகராட்சி மேயர் அன்பழகன் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி, பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

அருகில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன் அவர்கள், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் தயாநிதி, மாமன்ற உறுப்பினார்கள் , மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *