திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமு வயது 48 இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் விஜய் வயது 26 ஹரி வயது 25 ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த வாலிபர்கள் ஹரி, விஜய் ஆகியோர் மீதும் பல்வேறு காவல் நிலையத்தில் பல்வேறு நிலுவையில் இருப்பதால் வாலிபர்கள் இருவரும் தலைமறைவாக வெளியூரில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஹரி மற்றும் விஜய் ஆகிய இருவரும் ராமு விடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் ராமு பணம் தர மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் எங்களுக்கு பணம் தராத கை உனக்கு எதற்கு என கூறியபடி வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமுவின் இடதுகையை வாலிபர்கள் 2 பேரும் துண்டாக வெட்டினர் மேலும் துண்டான கையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ராமுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் ராமுவின் கை மற்றும் வெட்டிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்