கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

மேலும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள புது தெரு ஆர்பட்மார்சல் உயர்நிலை பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நடந்தது. .இதில் ஏராளமான மாணவ, மாணவிகளை ஆர்வமுடன் பள்ளியில் சேர்ப்பதற்காக பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *