திருச்சி கே கே நகர் லூர்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் சவுதி அரேபியாவில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி தேவி இவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் சுபிக்ஷா இவர் கோயம்புத்தூரில் டாக்டராக பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று கோயம்புத்தூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக பேராசிரியர் தேவி கோயம்புத்தூர் சென்றிருந்தார் மீண்டும் இன்று மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனடியாக தனது அறைக்கு சென்ற பேராசிரியருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அறையில் பீரோ கதவுகள் திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 சவரன் வைர நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேராசிரியர் தேவி திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் கேகே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்