இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாயொட்டி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதபடை மைதானத்தில் இன்று காலை 09.05 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் மூவண்ண கலர் பலூன்கள் வானில் பறக்க விட்டு. அதன் பின்னர் மாநகர காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வெளி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். மேலும் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *