நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று உய்யகொண்டான் குழுமாயி அம்மன் கோவில் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சாய்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *