மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே “சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே” என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. போட்டிகள் வரும் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெறுகிறது. போட்டி தினத்தன்றே பரிசளிப்பு விழாவும் நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர, ஆறுதல் பரிசாக நூல்களும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள 9095146767 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *