திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன் இவரது சகோதரர் மனோகரன் வயது (65) வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் சாலையில் நின்றிருந்த லாரியின் உள்ளே திருட முயற்சித்தனர் அங்கு ஒன்றுமில்லை என தெரிந்து வெளியே வந்தவர்கள் வீட்டின் வாசலில் படுத்திருந்த முதியவரான மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் மனோகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது முதியவரை தாக்கி பணம் பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *