திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பாத்திமா சகாயராஜ் இவர் நேற்று பணியில் இருந்தபோது . திமுக பிரமுகர் கோபி என்பவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார் பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார் இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *