திருச்சி மணிகண்டம் கீழ பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) இவரது மகன் சந்தோஷ் (வயது 24). இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஐந்து வருடகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அந்தப் பெண் வீட்டாருக்கு தெரியவரவே பெண்ணின் அண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 27) என்பவர் சந்தோசை அதிக முறை என் தங்கையுடன் பழகாதே என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை சுமார் 12 மணி அளவில் சந்தோசை ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சந்தோசை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *