திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார் இவரது மனைவி பங்கஜவல்லி இவர்களுக்கு மூன்று மகன்கள் மூத்தமகன் ஆகாஷ் என்ற செல்வமாரி வயது (21) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட இரண்டு வயது மூத்தவரான தாயனூரை சேர்ந்த அகிலா வயது (23) என்பவரை காதலித்து இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே இரு வீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொண்டனர்.

 தற்போது அகிலா 5 மாத கர்ப்பமாக அவரது தாய் வீட்டில் உள்ளார். இந்நிலையில், நேற்றிரவு பள்ளக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து இரவு சுமார் 9 மணியளவில் சாப்பிட்டு விட்டு, தனது தாயிடம் மனைவியை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை புங்கனூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள வயல் வெளியில் முகம் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் ஆகாஷ் பிணமாக கிடந்தார். குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை சுற்றிப்பார்க்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி, வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட ஆகாஷின் உச்சந்தலையில் கொலையாளிகள் ஸ்குரு டிரைவர் அல்லது கத்தரிக் கோலால் அடித்து இறக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆகாஷின் பெற்றோர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி கதறி அழுதனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடிப்பழகத்திற்கு அடிமையான ஆகாஷ் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த போதிலும் அவரது வீட்டிற்கு சென்று வருவது தொடர்பாக யாராவது அவரை கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *