திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டாஸ்மாக் கடை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்ட களத்திற்கு திருச்சி கிழக்கு தாசில்தார் வருகை தந்து டாஸ்மாக் மதுபான கடையை மூடிட மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு CPI(M)மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா,DYFl மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், CPI(M)பகுதி செயலாளர் சிவகுமார் உள்பட தோழர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்